search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பள்ளப்பாளையம் குளத்தில் தண்ணீர் நிரம்புவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

    பள்ளபாளையம் குளத்தின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் சாமளாபுரம் பேரூராட்சி எல்லையில் உள்ள சாமளாபுரம் குளம் மற்றும் பள்ளபாளையம் குளங்கள் தூர்வாரி புனரமைக்கப்பட்டுள்ளன. சாமளாபுரம் குளம் நிரம்பிய நிலையில் உபரிநீர் பள்ளபாளையம் குளத்துக்கு வர தொடங்கியுள்ளது.  

    கடந்த சில நாட்களாக உபரிநீர் பெருக்கெடுத்து செல்வதால் பள்ளபாளையம் குளத்தின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளபாளையம் குளம் தூர்வாரி, கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    நீண்ட நாட்களாக தண்ணீர் இன்றி குளம் வறண்டு காணப்பட்டது. இந்நிலையில், குளத்துக்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×