search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு- மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

    கரூர் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கரூர்:

    கரூர் அருகே உள்ள செவ்வந்திப்பாளையம் பால்வார் பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 51) விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஜெயராமன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அவர் வீட்டினுள் உள்ளே அலமாரியில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து ஜெயராமன் கரூர் வாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகையை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×