search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்பு - அதிகாரி தகவல்

    விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    பல்லடம்:

    காங்கயம், தாராபுரம், பல்லடம் ஆகிய துணை மின் நிலையங்களை உள்ளடக்கிய பல்லடம் மின் பகிர்மான வட்டம் செயல்படுகிறது.

    மேற்கூறிய பகுதிகளில் விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைவில் இணைப்பு வழங்கப்படும் என மின் பகிர்மான வட்ட கழக மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

    கடந்த 2005 மார்ச் 31-ந்தேதி வரை எந்தவித கட்டணமும் செலுத்தாமல் சாதாரண மின் இணைப்புக்கு விண்ணப்பித்தோர் 2011 மார்ச் 31-ந்தேதி வரை ரூ. 25 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் திட்டத்தில் விண்ணப்பித்தோர் மற்றும் தட்கல் முறையில் விண்ணப்பித்தவர்கள் ஆகியோருக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேற்கூறிய திட்டங்களின் கீழ் காங்கயம் துணை மின் நிலையத்துக்கு 899, பல்லடத்துக்கு 1,238 மற்றும் தாராபுரத்துக்கு 3,453 என மொத்தம், 5,590 மின் இணைப்புகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் பெறப்பட்டு மின் இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×