search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நவம்பர் மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம்

    புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
    திருப்பூர்:

    தமிழகத்தில் சமீபத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அடுத்தாண்டு ஜனவரி மாத இறுதியில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதற்கு முன் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களில் வருகிற  நவம்பர் 13 மற்றும், 14-ந் தேதி முதல் கட்டமாகவும், இரண்டாம் கட்டமாக நவம்பர் 27 மற்றும் 28-ந்தேதி என நான்கு நாட்கள் வாக்காளர் பெயர் சேர்த்தல் - திருத்த சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    Next Story
    ×