search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்குறிச்சி மாவட்டம்
    X
    கள்ளக்குறிச்சி மாவட்டம்

    உள்ளாட்சி தேர்தல்- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3,773 உள்ளாட்சி பதவிகளுக்கு 13,878 பேர் வேட்புமனு தாக்கல்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு 167 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
    கள்ளக்குறிச்சி:

    தமிழகத்தில் விழுப்புரம்-கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. ஆர்வத்துடன் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு 167 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான 180 பதவிகளுக்கு 1209 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான 412 பதவிகளுக்கு 2256 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

    கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 3162 பதவிகளுக்கு 10,256 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 3,773 உள்ளாட்சி பதவிகளுக்கு 13,878 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
    Next Story
    ×