search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    நல்லம்பள்ளி அருகே விநாயகர் கோவில் பூட்டை உடைத்து நகை திருட்டு

    நல்லம்பள்ளி அருகே விநாயகர் கோவில் பூட்டை உடைத்து நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நல்லம்பள்ளி:

    நல்லம்பள்ளி அருகே வள்ளுவர் நகரில் ராஜகணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 4 தங்க தாலிகளை திருடி சென்றதாக கூறப்படுகிறது. 2 மாதங்களுக்கு பிறகு இந்த திருட்டு குறித்து கோவில் நிர்வாகி அதியமான்கோட்டை போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×