search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    முக்குளம் ஊராட்சியில் ஏரியில் மணல் கடத்தல்- 3 பேர் கைது

    முக்குளம் ஊராட்சியில் ஏரியில் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரிமங்கலம்:

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த முக்குளம் ஊராட்சி நாகல் ஏரியில் மர்மநபர்கள் மண் மற்றும் மணல் கடத்தி செல்வதாக காரிமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்ற போது ஏரியில் பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் சிலர் மணல் லோடு ஏற்றிக்கொண்டிருந்தனர் இதையடுத்து மணலுடன் டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த குமார், இளவரசன், சரவணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
    Next Story
    ×