என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு ஆணை- மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறார்
Byமாலை மலர்22 Sep 2021 8:33 AM GMT (Updated: 22 Sep 2021 10:29 AM GMT)
விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னை:
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
விவசாயிகள் முழுமையான பலன்களை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் விவசாயத்துக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
இந்தநிலையில் விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளை வழங்கி உள்ளன.
இந்த புதிய மின் இணைப்புக்கான ஆணைகள் விவசாயிகளுக்கு நாளை (வியாழன்) வழங்கப்பட உள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நாளை காலை 10. 30 மணிக்கு இதற்கான விழா நடைபெறுகிறது.
விழாவில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு ஆணை வழங்குவதை தொடங்கி வைக்கிறார். அதன் அடையாளமாக சில விவசாயிகளுக்கு அவர் ஆணை பத்திரங்களை வழங்குகிறார்.
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
விவசாயிகள் முழுமையான பலன்களை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் விவசாயத்துக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
இந்தநிலையில் விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளை வழங்கி உள்ளன.
விழாவில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு ஆணை வழங்குவதை தொடங்கி வைக்கிறார். அதன் அடையாளமாக சில விவசாயிகளுக்கு அவர் ஆணை பத்திரங்களை வழங்குகிறார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மின்சார வாரியம் செய்து வருகிறது.
இதையும் படியுங்கள்... இந்த மாவட்டங்களில் எல்லாம் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X