என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நட்சத்திர ஓட்டலில் விபசாரத்தில் பெண்களை ஈடுபடுத்திய தொழிலதிபர்கள் 2 பேர் கைது
Byமாலை மலர்22 Sep 2021 6:00 AM GMT (Updated: 22 Sep 2021 6:00 AM GMT)
மசாஜ் சென்டரை நடத்தி வந்த தொழிலதிபர்கள் தீரஜ்குமார் மற்றும் பிரபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா பகுதியில் பிரபல நட்சத்திர ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி உள்ளது. இங்கு இயங்கும் மசாஜ் சென்டரில் மசாஜ் செய்ய வினோத்குமார் என்பவர் சென்றார்.
அப்போது அங்கிருந்த பெண்கள் வினோத்குமாரை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாகவும், அவருக்கு உடன்பாடு இல்லாத நிலையில் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சூரமங்கலம் போலீசார் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெங்களூரை சேர்ந்த 2 பெண்கள் மற்றும் நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் ஆகியோரை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தொழிலதிபர்களான சேலம் முள்ளுவாடிகேட் பகுதியை சேர்ந்த தீரஜ்குமார் மற்றும் அம்மாபேட்டையை சேர்ந்த பிரபு ஆகியோர் ஸ்பா எனப்படும் மசாஜ் சென்டரை அந்த நட்சத்திர ஓட்டலில் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து 3 பெண்களையும் மீட்ட போலீசார், மசாஜ் சென்டரை நடத்தி வந்த தொழிலதிபர்கள் தீரஜ்குமார் மற்றும் பிரபு ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது பாலியல் தொழில் செய்தது, கொலைமிரட்டல் விடுத்தது உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட 3 பெண்களும் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே சேலத்தில் மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடப்பதாக வந்த புகார்களின் அடிப்படையில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் 30-க்கும் மேற்பேட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் 10-க்கும் மேற்பட்டோரை குண்டர் சட்டத்தில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா பகுதியில் பிரபல நட்சத்திர ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி உள்ளது. இங்கு இயங்கும் மசாஜ் சென்டரில் மசாஜ் செய்ய வினோத்குமார் என்பவர் சென்றார்.
அப்போது அங்கிருந்த பெண்கள் வினோத்குமாரை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாகவும், அவருக்கு உடன்பாடு இல்லாத நிலையில் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சூரமங்கலம் போலீசார் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெங்களூரை சேர்ந்த 2 பெண்கள் மற்றும் நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் ஆகியோரை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தொழிலதிபர்களான சேலம் முள்ளுவாடிகேட் பகுதியை சேர்ந்த தீரஜ்குமார் மற்றும் அம்மாபேட்டையை சேர்ந்த பிரபு ஆகியோர் ஸ்பா எனப்படும் மசாஜ் சென்டரை அந்த நட்சத்திர ஓட்டலில் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து 3 பெண்களையும் மீட்ட போலீசார், மசாஜ் சென்டரை நடத்தி வந்த தொழிலதிபர்கள் தீரஜ்குமார் மற்றும் பிரபு ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது பாலியல் தொழில் செய்தது, கொலைமிரட்டல் விடுத்தது உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட 3 பெண்களும் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே சேலத்தில் மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடப்பதாக வந்த புகார்களின் அடிப்படையில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் 30-க்கும் மேற்பேட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் 10-க்கும் மேற்பட்டோரை குண்டர் சட்டத்தில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X