search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோவின் 77-வது பிறந்தநாள் கேக்கை அமைச்சர் மா. சுப்பிரமணியன், துரை வைகோ ஆகியோர் வெட்டிய போது எடுத்த படம்.
    X
    வைகோவின் 77-வது பிறந்தநாள் கேக்கை அமைச்சர் மா. சுப்பிரமணியன், துரை வைகோ ஆகியோர் வெட்டிய போது எடுத்த படம்.

    மக்கள் விரும்பினால் பதவிக்கு வருவேன்: துரை வைகோ பேச்சு

    திராவிட இயக்கம் வலுபெறுவதற்கும், திராவிட இயக்கத்தின் நன்மைக்காகவும் ம.தி.மு.க.வும், தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி போன்று இணைந்து செயல்பட வேண்டும்.
    சென்னை :

    சென்னை எழும்பூரில் உள்ள தனியார் அரங்கம் ஒன்றில், வடசென்னை கிழக்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் பெரியார், அண்ணா, வைகோ ஆகியோரின் பிறந்தநாள் விழாக்கள் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

    விழாவில், வைகோவின் 77-வது பிறந்தநாள் விழாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும், சகாப்தம் என்ற யூடியூப் சேனலையும் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    விழாவில் துரை வைகோ நலத்திட்ட உதவிகளை வழங்கி நிறைவுரை வழங்கினார்.

    பெரியாரும், பெருமாளும் உண்டு

    அப்போது, அவர் பேசியதாவது:-

    ம.தி.மு.க. இயக்க வரலாற்றிலும், வைகோவின் வரலாற்றிலும் வைகோவின் பிறந்தநாளை கொண்டாடுவது இதுதான் முதல் நிகழ்ச்சி.

    நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று எல்லோரும் கூறுகின்றனர். அதை நான் அப்போதே அறிவித்துவிட்டேன், துரை வையாபுரி முடிந்துவிட்டது, துரை வைகோ தொடங்கி விட்டது என்று சொல்லிவிட்டேன். நிறைய பேர், என்னை பதவிக்கு வர வேண்டும் என்றும் கூறுகிறார்கள். நான் அதற்கு தயாராக வேண்டும். பக்குவப்பட வேண்டும். சொல்லாற்றல், செயலாற்றலை பெருக்க வேண்டும். தொண்டர்கள் கூறுவது போன்று மக்களும் நான் பதவிக்கு வரவேண்டும் என்று கூறும் போது நான் பதவிக்கு வருவேன்.

    திராவிட இயக்கம் வலுபெறுவதற்கும், திராவிட இயக்கத்தின் நன்மைக்காகவும் ம.தி.மு.க.வும், தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி போன்று இணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×