search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவள்ளூர் அருகே காவலாளியை தாக்கி பணம் பறித்த வாலிபர் கைது

    திருவள்ளூர் அருகே காவலாளியை தாக்கி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த நுங்கம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 53). தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாகவேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த திருவள்ளூர் பெரியகுப்பம் மேட்டு தெருவை சேர்ந்த ஆகாஷ் (22) என்பவர் காவலாளியிடம் தகாத வார்த்தைகளால் பேசி கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ.500யை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டார்.

    இதுகுறித்து ராமலிங்கம் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து ஆகாசை கைது செய்து அவரிடம் இது சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×