என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாளை அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல்- 2 பேர் கைது
Byமாலை மலர்21 Sep 2021 2:28 PM GMT (Updated: 21 Sep 2021 2:28 PM GMT)
பாளை அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளை அருகே உள்ள மணப்படை வீட்டை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது53), தொழிலாளி. இவரது மகன் பாலு. இவருக்கும் கீழநத்தம் மேலூரை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் மூர்த்தி நேற்று தனது நண்பர்களுடன் இருதயராஜ் வீட்டுக்கு சென்று முன்விரோதம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மூர்த்தி அங்கிருந்த வேனின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இதை தட்டிக் கேட்ட இருதயராஜை அவதூறாக பேசி அரிவாளால் வெட்ட முயன்றனர். ஆனால் அவர் சுதாகரித்து தப்பி சென்றார். தொடர்ந்து அவர்கள் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றனர். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் வாசுதேவன் வழக்குப்பதிவு செய்து மூர்த்தி மற்றும் நாராயணனை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X