search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில் மது குடித்த 5 பேருக்கு அபராதம்

    கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில் மது குடித்த 5 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    சேந்தமங்கலம்:

    நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், கொல்லிமலை பகுதியில் வனத்துறை சார்பில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு மலைப்பாதையில் இறங்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள 37-வது கொண்டை ஊசி வளைவு வனப்பகுதியில் பரமத்திவேலூர் பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 5 பேர் மது குடித்து கொண்டிருந்தனர். இதனை கண்ட மாவட்ட வன அலுவலர் உடனடியாக நாமக்கல் வனச்சரகர் பெருமாளுக்கு 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து வனச்சரகர் பெருமாள் தலைமையில் தாதங்கோம்பை வனக்காப்பாளர் சரவணபெருமாள், நடுக்கோம்பை வனக்காப்பாளர் பிரவீன் ஆகியோர் 37-வது கொண்டை ஊசி வளைவுக்கு சென்று அங்கு மது குடித்துக் கொண்டிருந்த 5 பேரை பிடித்தனர். மேலும் அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    Next Story
    ×