search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    தியாகதுருகம் அருகே வாலிபர் மர்ம மரணம்

    தியாகதுருகம் அருகே வாலிபர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்டாச்சிமங்கலம்:

    தியாகதுருகம் அருகே உதயமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் மகன் மணிகண்டன்(வயது 31) தொழிலாளி. திருமணமான இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். அவரது சாவுக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை? இதுகுறித்து மணிகண்டனின் தந்தை நடேசன் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×