என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொட்டாம்பட்டி அருகே கார் கவிழ்ந்து சிறுவன் பலி
மேலூர்:
திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூரைச் சேர்ந்தவர் இன்சாத் அகமது (வயது 33). இவர் சென்னையில் தனியார் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சென்னை கொளத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது மனைவி ஹமீதா ஹனிதா. இவரது தந்தை திருநெல்வேலியில் இறந்துவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த இன்சாத் அகமது குடும்பத்தினர் காரில் சென்னையில் இருந்து இருந்து திருநெல்வேலிக்கு புறப்பட்டனர்.
நேற்று மதியம் மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த கொட்டாம்பட்டி அருகே உள்ள அய்யாபட்டி என்ற இடத்தில் 4 வழிச்சாலையில் சென்றபோது திடீரென்று மாடு ரோட்டின் குறுக்கே பாய்ந்தது. இதனால் காரை ஓட்டிய இன்சாத் அகமது, மாட்டின்மீது மோதி விடாமல் இருக்க காரை திடீர் பிரேக் போட்டார்.
இதில் கார் நிலை தடுமாறி அருகில் இருந்த ரோட்டோர பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.
காரில் இருந்த இன்சாத் அகமது, மனைவி ஹமீதா ஹனிதா, 8 வயது மகன் ஆசில் சினன், மகள் பசினா இப்போ ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகன் ஆசில் சினன் பரிதாபமாக உயிரிழந்தான்.
காயமடைந்த மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்