search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    புரட்டாசி மாதத்தால் ஆடு - கோழிகள் விலை வீழ்ச்சி

    கடந்த வாரம் 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ. 5ஆயிரத்திற்கு விற்பனையானது. இந்த வாரம் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.4ஆயிரத்து 500 க்கு மட்டுமே விற்பனையானது.
    குண்டடம்:

    குண்டடம் வாரச்சந்தையில் ஆடுகள், கோழிகள் விற்பனை நடைபெறும். சந்தைக்கு குண்டடம், காங்கேயம், தாராபுரம், ஊதியூர், மடத்துக்குளம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் விற்பனைக்காக வெள்ளாடுகள், செம்மறியாடுகள் மற்றும் கோழிகள் ஆகியவைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். 

    அதேபோல் ஈரோடு, கோவை, திருப்பூர். பொள்ளாச்சி, மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த சேர்ந்த வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர். தற்போது புரட்டாசி மாதம் தொடங்கியதால் ஆடுகள் விலை வீழ்ச்சியடைந்தது. 

    இதுகுறித்து ஆடு வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    கடந்த சில வாரங்களகவே ஆடுகள், கோழிகள் விற்பனை மந்தமாக இருந்தது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் இறைச்சி சாப்பிடுவோர் எண்ணிக்கை குறையும் என்பதால் ஆடு, கோழிகள் வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. 

    இதனால் விலையில் கடும் வீழ்ச்சியடைந்தது. கடந்த வாரம் 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ. 5ஆயிரத்திற்கு விற்பனையானது. இந்த வாரம் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.4ஆயிரத்து 500 க்கு மட்டுமே விற்பனையானது. வளர்ப்பு ஆடுகளும் விற்பனை ஆகவில்லை என்பதால் 500-க்கும் மேற்பட்ட ஆடுகளை திருப்பி கொண்டு சென்றனர். 

    அதேபோல் கடந்த வாரம் கோழி கிலோ ரூ.350 வரை விற்பனையானது. ஆனால் இந்த வாரம் ரூ.300 வரை மட்டுமே விற்பனையானது. இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×