என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எருமப்பட்டி அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்20 Sep 2021 10:51 AM GMT (Updated: 20 Sep 2021 10:51 AM GMT)
எருமப்பட்டி அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள வடவத்தூர் ஊராட்சி தலைமலை வனப்பகுதியில் முதியவர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக எருமப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற முதியவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் இறந்தவர் சென்னையை சேர்ந்த வீராசாமி (வயது 58) என்பதும், இவர் திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தலைமலைபட்டியில் வசிக்கும் அவரது மகள் ஜீவா (35) வீட்டில் கடந்த 6 மாதங்களாக இருந்து வந்தது தெரியவந்தது.
மேலும் அவர் நோய்வாய்பட்டு அவதிப்பட்டு வந்ததாகவும், இதையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்ப வில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்தநிலையில் போலீசார் உடலை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X