search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனு கொடுக்க வந்த மகாதேவன்.
    X
    மனு கொடுக்க வந்த மகாதேவன்.

    குடும்பத்துடன் கருணை கொலை செய்து விடுங்கள்-மாற்றுத்திறனாளி மனுவால் பரபரப்பு

    கருணை கொலை செய்யுமாறு மகாதேவன் கொடுத்த மனுவால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
    திருப்பூர்:
     
    திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாஅவரப்பாளையத்தை  சேர்ந்தவர் மகாதேவன், மாற்றுத்திறனாளி. இவர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த 5 வருடமாக வீட்டுமனை பட்டா மற்றும் குடிசை மாற்று வாரியத்தில் மனு கொடுத்தும் எனக்கு பட்டா எதுவும்  வழங்கப்படவில்லை.

    எனவே நான் மற்றும் எனது மனைவி, மகன் ஆகிய 3 பேரையும் குடும்பத்துடன் கருணை கொலை செய்து விடுங்கள் என்று  தெரிவித்துள்ளார்.

    மேலும் ரேசன் கார்டு, ஆதார் கார்டுகளை ஒப்படைக்க போவதாகவும் தெரிவித்தார். கருணை கொலை செய்யுமாறு மகாதேவன் கொடுத்த மனுவால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
    Next Story
    ×