என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு பெற 654 பேர் விண்ணப்பம்
Byமாலை மலர்20 Sep 2021 9:06 AM GMT (Updated: 20 Sep 2021 9:06 AM GMT)
முகாமில் கலந்துகொள்ள முடியாதவர்கள் நகராட்சி அலுவலக வேலை நாட்களில் வருகிற 24-ந்தேதி வரை விண்ணப்பம் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பல்லடம்:
பல்லடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பெறுவதற்கு சிறப்பு முகாம் நடைபெற்றது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் விநாயகம் கூறியதாவது:
பல்லடம் நகராட்சி பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களில் அவர்களது பெயரிலோ, அல்லது குடும்பத்தார் பெயரிலோ, சொந்த வீடு அல்லது நிலம் இல்லாத பயனாளி மற்றும் குடும்பத்தாரின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
இதற்கு அரசு நிர்ணயிக்கும் சுமார் ரூ.1.50 லட்சம் பயனாளியின் பங்களிப்பாக செலுத்த வேண்டும். அதற்கான சிறப்பு முகாம் பல்லடம் நகராட்சி அலுவலகத்தில், நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் 654 மனுக்கள் பெறப்பட்டது.
கலந்துகொள்ள முடியாதவர்கள், நகராட்சி அலுவலக வேலை நாட்களில் வருகிற 24-ந்தேதி வரை விண்ணப்பம் தரலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X