search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஏற்காடு மலைப்பாதை அருவியில் அரை நிர்வாண ஆட்டம் போட்ட பண்ருட்டி வாலிபர்கள் 5 பேர் கைது

    ஏற்காடு மலைப்பாதை அருவியில் அரை நிர்வாண ஆட்டம் போட்ட பண்ருட்டி பண்டாரகோட்டை பகுதியைச் சேர்ந்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    ஏற்காடு:

    ஊரடங்கு தளர்வுகள் காரணமாக ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. படகு சவாரி தொடங்கப்பட்டு பூங்காக்கள் திறக்கப்பட்டு உள்ளதால் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. தொடர் மழையினால் ஏற்காடு மலைப்பாதையில் ஆங்காங்கே திடீர் அருவிகள் தோன்றியுள்ளன.

    இந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். நேற்று மலைப்பாதையில் 3-வது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள அருவியில் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது இதர சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அவர்கள் அரை நிர்வாணமாக குளித்ததாக தெரிகிறது.

    அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற ஏற்காடு போலீசார் அந்த வாலிபர்களை கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் ஆயுதப்படை காவலர் கனகவேல் என்பவரை தகாத வார்த்தையில் திட்டி செல்போனை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஏற்காடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஏற்காடு போலீசார் அருவியில் அரை நிர்வாண ஆட்டம் போட்ட பண்ருட்டி பண்டார கோட்டை பகுதியைச் சேர்ந்த சவுந்தரராஜன், சந்தோஷ் குமார் (வயது33), சதீஷ் (29), பிரவீன்குமார் (24), சதீஷ் (29) ஆகியோரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×