என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 7 ஆயிரம் கன அடியாக குறைப்பு
Byமாலை மலர்20 Sep 2021 4:01 AM GMT (Updated: 20 Sep 2021 10:01 AM GMT)
அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிய தொடங்கி உள்ளது.
மேட்டூர்:
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் பருவ மழை பெய்ததால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டதால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இந்த நிலையில் நேற்று மழை குறைந்ததால் காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. நேற்று காலை விநாடிக்கு 12 ஆயிரத்து 112 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 10 ஆயிரத்து 277 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரியில் 16 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 750 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் இன்று காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 7 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிய தொடங்கி உள்ளது. நேற்று 73.61 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 72.97 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் பருவ மழை பெய்ததால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டதால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இந்த நிலையில் நேற்று மழை குறைந்ததால் காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. நேற்று காலை விநாடிக்கு 12 ஆயிரத்து 112 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 10 ஆயிரத்து 277 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரியில் 16 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 750 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் இன்று காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 7 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிய தொடங்கி உள்ளது. நேற்று 73.61 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 72.97 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X