என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமநாதபுரம் அருகே விபத்தில் ஒருவர் பலி
Byமாலை மலர்19 Sep 2021 2:59 PM GMT (Updated: 19 Sep 2021 2:59 PM GMT)
ராமநாதபுரம் அருகே விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் ரெகுநாதபுரம் அருகே தெற்கு கும்பரத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ்(வயது 22). இவரும், இவரது தந்தை ரவிச்சந்திரன் (வயது 45) என்பவரும் ராமநாதபுரத்தில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். ராம்நகர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயமடைந்த ரவிச்சந்திரன் ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மோகன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X