search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    ராமநாதபுரம் அருகே விபத்தில் ஒருவர் பலி

    ராமநாதபுரம் அருகே விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் ரெகுநாதபுரம் அருகே தெற்கு கும்பரத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ்(வயது 22). இவரும், இவரது தந்தை ரவிச்சந்திரன் (வயது 45) என்பவரும் ராமநாதபுரத்தில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். ராம்நகர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயமடைந்த ரவிச்சந்திரன் ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மோகன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    Next Story
    ×