என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மின்வாரிய ஊழியர் பலி
Byமாலை மலர்19 Sep 2021 10:35 AM GMT
ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலம் அருகே ஆலங்கோட்டையைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 57).
இவர், தெங்கம்புதூர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் ராஜாக்கமங்கலத்தில் இருந்து ஆலங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ராஜாக்கமங்கலம் சந்திப்பில் சென்ற போது அந்த வழியாக வந்த தர்மபுரத்தைச் சேர்ந்த அஜித் (25) என்பவரது மோட்டார் சைக்கிள், குமரேசன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
படுகாயம் அடைந்த குமரேசனை தனியார் ஆஸ்பத்திரியிலும், அஜித்தை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். இதில் குமரேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் குமரேசன் மகன் அஜித் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ் லாரன்ஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜாக்கமங்கலம் அருகே ஆலங்கோட்டையைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 57).
இவர், தெங்கம்புதூர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் ராஜாக்கமங்கலத்தில் இருந்து ஆலங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ராஜாக்கமங்கலம் சந்திப்பில் சென்ற போது அந்த வழியாக வந்த தர்மபுரத்தைச் சேர்ந்த அஜித் (25) என்பவரது மோட்டார் சைக்கிள், குமரேசன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
படுகாயம் அடைந்த குமரேசனை தனியார் ஆஸ்பத்திரியிலும், அஜித்தை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். இதில் குமரேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் குமரேசன் மகன் அஜித் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ் லாரன்ஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X