search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மோட்டர் பம்பை திருடிய தொழிலாளி கைது

    சம்பவத்தன்று கண்டெய்னரில் இருந்த மோட்டார் பம்பை காணவில்லை. இதுகுறித்து மூலனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
    மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தலையூர் பிரிவு அருகே  தனியார்காற்றாலை நிறுவனம் இயங்கி வருகிறது. இதில்கண்ணன் என்பவர்  வேலை பார்த்து  வந்தார்.

    இந்தநிலையில் காற்றாலைஅமைக்க தேவையான உபகரணங்களை கண்டெய்னரில் வைத்து தேவைப்படும் போது பொருட்களை எடுத்து பயன்படுத்தி விட்டு பூட்டி விடுவார்கள். சம்பவத்தன்று கண்டெய்னரில் இருந்த மோட்டார் பம்பை காணவில்லை.

    இதுகுறித்து மூலனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியதில் மோட்டார் பம்பை திருடியது கண்ணன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவர் பதுக்கி வைத்திருந்த மோட்டார் பம்பை மீட்டனர்.
    Next Story
    ×