search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    பருவமழை சரியாக பெய்யாததால் விவசாயிகள் ஏமாற்றம்

    பருவ மழைகளின் சராசரி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு வேறுபடுகிறது. அதன்படி தென்மேற்கு பருவமழை நடப்பாண்டு குறைந்த அளவே கிடைத்துள்ளது.
    திருப்பூர்:

    பல்லடம் வட்டாரத்தில் ஆண்டுக்கு சராசரியாக 500 மி.மீ., மழை பதிவாகிறது. இது தவிர பி.ஏ.பி., பாசன திட்டத்தின் மூலம் பெரும்பாலான விவசாயிகள் பயன் பெறுகின்றனர். ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவ மழை மற்றும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை கிடைக்கும் வடகிழக்கு பருவ மழையால் விவசாயிகளின் தண்ணீர் பற்றாக்குறை ஓரளவு பூர்த்தி ஆகிறது.

    பருவ மழைகளின் சராசரி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு வேறுபடுகிறது. அதன்படி தென்மேற்கு பருவமழை நடப்பாண்டு குறைந்த அளவே கிடைத்துள்ளது. 2018ல், சராசரியாக 327 மி.மீ., 2019ல் 571 மி.மீ., மற்றும் 2020ல் 622 மி.மீ., பருவ மழை பெய்துள்ளது. நடப்பு ஆண்டு 263 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. 

    அதில் தென் மேற்கு பருவ மழை 81 மி.மீ., மட்டுமே இதுவரை கிடைத்துள்ளது. வரும் அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால் இந்த பருவம் கைகொடுக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 
    Next Story
    ×