என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பருவமழை சரியாக பெய்யாததால் விவசாயிகள் ஏமாற்றம்
Byமாலை மலர்19 Sep 2021 7:16 AM GMT (Updated: 19 Sep 2021 7:16 AM GMT)
பருவ மழைகளின் சராசரி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு வேறுபடுகிறது. அதன்படி தென்மேற்கு பருவமழை நடப்பாண்டு குறைந்த அளவே கிடைத்துள்ளது.
திருப்பூர்:
பல்லடம் வட்டாரத்தில் ஆண்டுக்கு சராசரியாக 500 மி.மீ., மழை பதிவாகிறது. இது தவிர பி.ஏ.பி., பாசன திட்டத்தின் மூலம் பெரும்பாலான விவசாயிகள் பயன் பெறுகின்றனர். ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவ மழை மற்றும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை கிடைக்கும் வடகிழக்கு பருவ மழையால் விவசாயிகளின் தண்ணீர் பற்றாக்குறை ஓரளவு பூர்த்தி ஆகிறது.
பருவ மழைகளின் சராசரி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு வேறுபடுகிறது. அதன்படி தென்மேற்கு பருவமழை நடப்பாண்டு குறைந்த அளவே கிடைத்துள்ளது. 2018ல், சராசரியாக 327 மி.மீ., 2019ல் 571 மி.மீ., மற்றும் 2020ல் 622 மி.மீ., பருவ மழை பெய்துள்ளது. நடப்பு ஆண்டு 263 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
அதில் தென் மேற்கு பருவ மழை 81 மி.மீ., மட்டுமே இதுவரை கிடைத்துள்ளது. வரும் அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால் இந்த பருவம் கைகொடுக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X