என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவை மாவட்டத்தில் மீண்டும் நாளை மெகா தடுப்பூசி முகாம்
கோவை:
கோவை மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் நாளை (19-ந் தேதி) மீண்டும் நடக்கிறது. முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி பகுதியில் மட்டும் 266 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு 32 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள். வ.உ.சி மைதானத்தை சுற்றிலும் 5 இடங்கள், சந்தை, போலியோசொட்டு மருந்து போடும் இடங்கள் என சுமார் 1,500 இடங்ளில் தடுப்பூசி முகாம் ஏற்படுத்தப்படவுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் 12-ந் தேதி 1475 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டது. இந்த தடுப்பூசி முகாமின் மூலம் இலக்கை கடந்து 1.51 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மாநகராட்சி பகுதியில் மட்டும் 76ஆயிரத்து 817 பேருக்கு செலுத்தப்பட்டது. இந்நிலையில் நாளை நடக்கும் தடுப்பூசி முகாமில் இதுவரை தடுப்பூசி போடாமல் விடுப்பட்டவர்கள் மற்றும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திவிட்டு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்