என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதலிக்கு வீடியோ கால் செய்து தூக்குமாட்டிய வாலிபர் - கயிறு இறுக்கியதில் பலி
Byமாலை மலர்18 Sep 2021 9:22 AM GMT (Updated: 18 Sep 2021 9:22 AM GMT)
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜாகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர்:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜாகுமார், (வயது 18). இவர் திருப்பூர் ஈட்டிவீரம்பாளையம் முட்டியங்கிணறு பகுதியில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.
இந்தநிலையில் அவர் சொந்த ஊரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். சம்பவத்தன்று பீகாரில் உள்ள காதலிக்கு ‘வாட்ஸ் அப்’ வீடியோவில் பேசி உள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து ராஜாகுமார், காதலியை பயமுறுத்தும் வகையில் விளையாட்டாக ‘நான் தற்கொலை செய்ய போகிறேன்’ என கூறி கயிற்றால் கழுத்தில் சுற்றி மரத்தை பிடித்து தொங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கயிறு கழுத்தை இறுக்கியதில் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பலியானார்.
இதை வீடியோவில் பார்த்த காதலி அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜாகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X