என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கு சென்று கொரோனா பரிசோதனை
Byமாலை மலர்18 Sep 2021 4:43 AM GMT (Updated: 18 Sep 2021 4:43 AM GMT)
காய்ச்சலுடன் பள்ளிக்கு நேற்று வந்த மாணவர்கள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இன்று சுமார் 40 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
தென்காசி:
ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தையில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 450 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு சுற்றுவட்டார பகுதிகளான உடையாம்புளி, புதூர், நாலாங்குறிச்சி, செட்டிக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பஸ்களில் வந்து படித்து செல்கின்றனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு இங்கு சுமார் 20 மாணவிகளுக்கு உடல் வெப்பநிலை அதிகரித்து திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டது.
தொடர்ந்து நேற்று முன்தினம் மேலும் 32 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையிலும் நெகட்டிவ் என வந்ததால் ஆசிரியர்கள் நிம்மதி அடைந்தனர்.
எனினும் நேற்று ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதே சமயம் காய்ச்சலுடன் பள்ளிக்கு நேற்று வந்த மாணவர்கள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்தனர்.
நேற்று வரை 104 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இன்றும் சுமார் 40 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. விரைவில் அந்த பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை செய்து முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தையில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 450 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு சுற்றுவட்டார பகுதிகளான உடையாம்புளி, புதூர், நாலாங்குறிச்சி, செட்டிக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பஸ்களில் வந்து படித்து செல்கின்றனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு இங்கு சுமார் 20 மாணவிகளுக்கு உடல் வெப்பநிலை அதிகரித்து திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டது.
தொடர்ந்து நேற்று முன்தினம் மேலும் 32 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையிலும் நெகட்டிவ் என வந்ததால் ஆசிரியர்கள் நிம்மதி அடைந்தனர்.
எனினும் நேற்று ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதே சமயம் காய்ச்சலுடன் பள்ளிக்கு நேற்று வந்த மாணவர்கள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்தனர்.
நேற்று வரை 104 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இன்றும் சுமார் 40 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. விரைவில் அந்த பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை செய்து முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X