என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் அருகே பெண்ணிடம் 10 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்17 Sep 2021 12:55 PM GMT (Updated: 17 Sep 2021 12:55 PM GMT)
திருமங்கலம் அருகே பெண்ணிடம் 10 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார் மனைவி ஜெயசுதா (வயது 36). இவர் தனது சித்தி மகள் திருமணத்திற்காக திருமங்கலம் வந்து திருமங்கலத்தில் இருந்து கோவில்பட்டிக்கு தனியார் பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது திருமங்கலம் தேவர் சிலை அருகே 3 பெண்கள் ஏறியுள்ளனர். மூன்று பெண்களில் ஒரு பெண் நெஞ்சு வலிப்பது போல் ஜெயசுதா அருகில் அமர்ந்து கையில் வைத்திருந்த 10 பவுன் நகையை திருடி கொண்டு கள்ளிக்குடியில் இறங்கிவிட்டார். சிறிது தூரம் சென்றவுடன் பையை பார்த்த ஜெயசுதா நகை காணாமல்போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X