என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
முசிறி அருகே செங்கல் லோடு லாரி கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி
முசிறி:
முசிறி அய்யப்பாளையத்திலிருந்து, நாச்சம்பட்டிக்கு செங்கல் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றது. லாரியை அய்யப்பாளையத்தை சேர்ந்த துரைராஜ் ஓட்டி சென்றார். இதில் செங்கல் இறக்கிவைப்பதற்கா அய்யப்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி, பெரம்பலூரை சேர்ந்த சுதாகர், ராசாத்தி, வீரமணி பட்டியை சேர்ந்த சந்திரா, நாச்சம்பட்டியை சேர்ந்த மலர்கொடி மற்றும் வேலகாநத்தத்தை சேர்ந்த லட்சுமணன் அமர்ந்து சென்றனர்.
லாரி நாச்சம்பட்டி வளைவு அருகே சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத ஆள் மீது மோதாமல் இருக்க, லாரியை வளைத்த போது, எதிர்பாராத விதமாக லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்தானது. இதில் சுப்பிரமணி அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மற்றவர்கள் காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதனை பார்த்த அப்பகுதியினர் முசிறி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் விரைந்துவந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் விபத்து நடந்த உடன் டிரைவர் துரைராஜ் சிறு காயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்