என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதலியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய டிரைவர் கைது
Byமாலை மலர்17 Sep 2021 10:21 AM GMT (Updated: 17 Sep 2021 10:21 AM GMT)
காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் அந்த பெண் சாரதியுடன் பழகுவதை நிறுத்தி கொண்டார்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெரியகோட்டை பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் சாரதி (24). டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் சாரதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி இருவரும் பல்வேறு இடங்களில் தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை சாரதி அந்தப் பெண்ணிற்கு தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார்.
இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் அந்த பெண் சாரதியுடன் பழகுவதை நிறுத்தி கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சாரதி அந்த பெண்ணிடம் நீ என்னுடன் வந்து விடு, இல்லை என்றால் நாம் தனியாக இருந்த ஆபாச படங்களை வெளியிட்டு வெளியிட்டு விடுவதாக மிரட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து உடுமலை மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் சாரதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X