என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியார் பிறந்தநாளையொட்டி சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு
Byமாலை மலர்17 Sep 2021 9:54 AM GMT (Updated: 17 Sep 2021 9:54 AM GMT)
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திருப்பூர்:
தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாளையொட்டி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வினீத் தலைமையில் அலுவலர்கள் சமூக நீதிநாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பணியாளர்கள் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க., சார்பில் திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு அவைத்தலைவர் நேமிநாதன் தலைமையில் மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ் முன்னிலையில் மாலை அணிவித்து சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதில் மாவட்ட, ஒன்றிய, பகுதி, அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேப்போல் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் சார்பில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X