என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் கோவிலில் ஐம்பொன் சாமி சிலைகளை திருடிய பனியன் நிறுவன தொழிலாளி கைது
Byமாலை மலர்17 Sep 2021 9:33 AM GMT (Updated: 17 Sep 2021 9:33 AM GMT)
சிலை கொள்ளை வழக்கில் துரிதமாக செயல்பட்டு சிலைகள் மற்றும் பணத்தை மீட்ட வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா பாராட்டினார்.
திருப்பூர்:
திருப்பூர் வீரபாண்டி ஜே.ஜே.நகர் 2-வது வீதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவில் கருவறைக்குள் ஒரு பெட்டியில்7 சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. இதில் சிவலிங்கேஸ்வரர், காசி விசுவநாதர், ஏழுமலையான் ஆகிய 3 ஐம்பொன் சிலைகளும், மற்ற 4 சிலைகளும் கல் சிலைகளாகும்.
இந்த நிலையில் ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் சிலைகளை திருடி சென்றனர். மேலும் சிலைக்கு அணிவிக்கும் தங்க ஆபரணங்கள் வைக்கப்பட்டிருந்த நகை பெட்டியும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 4 பவுன் நகையும் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து கோவில் கமிட்டி சார்பாக வீரபாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.புகாரின் அடிப்படையில் துணை கமிஷனர் வரதராஜன் உத்தரவின் பேரில் வீரபாண்டி இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ்குமார், அழகுராஜா மற்றும் போலீசார் சதீஷ், ரங்கராஜன் ஆகியோர் சம்பந்தப்பட்டகோவிலுக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கோவில் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டனர். அதில் மர்ம ஆசாமி ஒருவர் கோவில் பூட்டை உடைத்து கோவிலுக்குள் செல்வதும், பின்னர் ஐம்பொன்சிலை, நகைகள், உண்டியல் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வதும் பதிவாகி இருந்தது.
இதையடுத்து கொள்ளையனின் உருவத்தை வைத்து விசாரிக்கும் போது அவர் வீரபாண்டி பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளி மணி (வயது 39) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 3 ஐம்பொன் சிலைகள், சிலைக்கு அணிவிக்கும் ஆபரணங்கள் 4 பவுன் மற்றும் உண்டியலில் இருந்த பணம் ரூ. 2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
சிலை கொள்ளை வழக்கில் துரிதமாக செயல்பட்டு சிலைகள் மற்றும் பணத்தை மீட்ட வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா பாராட்டினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X