search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்திக்குத்து
    X
    கத்திக்குத்து

    மார்த்தாண்டம் அருகே திருமண வீட்டில் மோதல்- 2 பேருக்கு கத்திக்குத்து

    மார்த்தாண்டம் அருகே திருமண வீட்டில் ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழித்துறை:

    மார்த்தாண்டம் அருகே உள்ள சிராயன்குழி கருடன் விளையை சேர்ந்தவர் ராபின் செல்வராஜ்(வயது 56). இவர் பம்மம் ஆதி முதலை அம்மன் கோவில் சமூகநல கூடத்தில் பராமரிப்பு மற்றும் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    சம்பவத்தன்று நடக்க இருந்த திருமணத்திற்கு சமூகநல கூடத்தில் துப்புரவு பணி மேற் கொள்ள சென்றார். அப்போது அவரிடம் சமூகநல கூடத்தில் இருந்தபோது, உண்ணாமலைக்கடை மங்களா நடையை சேர்ந்த கிருஷ்ணன், அரவிந்த், மடத்துவிளை அனில்குமார் ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர்.

    மேலும் விறகு கட்டையால் ராபின் செல்வராஜை தலையில் தாக்கினர். அதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்நிலையில் அதே சம்பவத்தில் தொடர்புடைய அரவிந்த்(28), அவரது நண்பர் கிருஷ்ணகுமார் ஆகியோர் அந்த சமுதாய நல கூடத்திற்கு உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்ற போது, அவர்களை கருடன் விளையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் கத்தியால் குத்தி உள்ளார்.

    இதில் அரவிந்துக்கு கையிலும், கிருஷ்ண குமாருக்கு நெற்றியிலும் கத்திக் குத்து காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்னர்.

    இரு தரப்பினரும் கொடுத்த புகார்களின் அடிப்படையில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு தரப்பைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    Next Story
    ×