search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    இலவச தொழில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

    இலவச சணல் பொருள் தயாரித்தல், ‘சிசிடிவி’ கேமரா பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள நபர்களுக்கு வேலை வாய்ப்பு தரக்கூடிய தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இலவச சணல் பொருள் தயாரித்தல், ‘சிசிடிவி’ கேமரா பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி 13 நாள் நடைபெறும். எழுத படிக்கத் தெரிந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும். 

    பயிற்சி நிறைவில் மத்திய அரசின் அனுமதி பெற்ற சான்றிதழ், சுய தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனையும் வழங்கப்படும். இதில் சேர விரும்புவோர், திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் கனரா வங்கி கிளை மாடியில் உள்ள பயிற்சி மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். 

    மேலும் விவரங்களுக்கு 99525 18441, 86105 33436 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×