என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமநாதபுரம் அருகே எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்16 Sep 2021 11:00 AM GMT (Updated: 16 Sep 2021 11:00 AM GMT)
ராமநாதபுரம் அருகே எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே கழுகூரணி கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் குமார் (வயது 40). இவருக்கு மனோன்மணி என்ற மனைவியும் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இவர் வழுதூரில் உள்ள ஒ.என்.ஜி.சி. நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்தார். அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்ததாகவும், இதனால் மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்த நிலையில் மனவேதனையில் மனைவியிடம் இந்த மாதிரி வாழ்வதை விட சாவதே மேல் என பலமுறை சொல்லி வந்தார். அவருக்கு மனைவி ஆறுதல் கூறி வந்தார்.
இந்த நிலையில், மனைவி, மகன் ஆகாஷ் செடிக்கு தண்ணீர் ஊற்றி முடித்து விட்டு, வீட்டிற்கு உள்ளே சென்ற போது உள்புறமாக கதவு அடைக்கப்பட்டு இருந்தது. உடனே சத்தம் போட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பிரதீப்குமார் பெட்ரூமில் தூக்கு மாட்டி கிடந்தார்.
தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்த போது டாக்டர் பரிசோதித்து விட்டுஅவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகே கழுகூரணி கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் குமார் (வயது 40). இவருக்கு மனோன்மணி என்ற மனைவியும் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இவர் வழுதூரில் உள்ள ஒ.என்.ஜி.சி. நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்தார். அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்ததாகவும், இதனால் மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்த நிலையில் மனவேதனையில் மனைவியிடம் இந்த மாதிரி வாழ்வதை விட சாவதே மேல் என பலமுறை சொல்லி வந்தார். அவருக்கு மனைவி ஆறுதல் கூறி வந்தார்.
இந்த நிலையில், மனைவி, மகன் ஆகாஷ் செடிக்கு தண்ணீர் ஊற்றி முடித்து விட்டு, வீட்டிற்கு உள்ளே சென்ற போது உள்புறமாக கதவு அடைக்கப்பட்டு இருந்தது. உடனே சத்தம் போட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பிரதீப்குமார் பெட்ரூமில் தூக்கு மாட்டி கிடந்தார்.
தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்த போது டாக்டர் பரிசோதித்து விட்டுஅவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X