search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வ.உ.சி. வரலாறு புகைப்பட கண்காட்சி பஸ்

    திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் இக்கண்காட்சியை பார்வையிடலாம்.
    திருப்பூர்:

    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150வது பிறந்தநாள் விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும், புகைப்படக் கண்காட்சி பஸ் இயக்கப்படுகிறது.

    பஸ்சை சுற்றிலும், வ.உசி., குடும்பம், சுதந்திர போராட்ட வரலாறுகளை விளக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், இதை பார்வையிடலாம். 

    கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் வினீத் கண்காட்சி பஸ்சை தொடங்கி வைத்தார். போக்குவரத்துக்கழக பொது மேலாளர் கணபதி, துணை மேலாளர் யுவராஜ், உதவி பொறியாளர் கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×