search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பள்ளிபாளையம் அருகே கஞ்சா விற்றவர் கைது

    பள்ளிபாளையம் அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் போலீசார் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எஸ்.பி.பி. காலனி பகுதியில் நின்ற ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் 200 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் மேச்சேரி வெள்ளாறு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
    Next Story
    ×