search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    ஆத்தூர் அருகே 11 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 11 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆத்தூர்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுண்டங்கி பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் மெளனிஷ் (வயது 11). பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதை தொடர்ந்து மெளனிஷை சேலம் மாவட்டம் ஆத்தூர் துளுக்கனூர் ஆனைக்கல் மேட்டில் உள்ள தனது தாய்மாமன் தினேஷ் என்பவர் வீட்டில் கடந்த 1 மாத காலமாக இருந்து வந்தான்.

    இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்து வெளியே விளையாட சென்ற மெளனிஷ் பின்னர் வீடு திரும்பவில்லை. இன்று காலை 7 மணி அளவில் மெளனிஷ் துளுக்கனூர் ஏரியில் உள்ள தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டான். அவனது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இது குறித்து ஆத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மெளனிஷ் உடலை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏரி தண்ணீரில் இறங்கி விளையாடியபோது மெளனிஷ் ஆழமான பகுதியில் சிக்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு மாணவன் மெளனிஷ்வுடன் விளையாட சென்ற சிறுவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×