என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமராவதிபாளையம் சந்தையில் ரூ.90 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை
Byமாலை மலர்15 Sep 2021 5:18 AM GMT (Updated: 15 Sep 2021 5:18 AM GMT)
கால்நடைகளை கட்டி வைக்க இடமில்லாமல் வேன், ஆட்டோக்களில் கட்டி வைத்திருந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் தென்னம்பாளையத்தில் நடந்த மாட்டுச்சந்தை இடமாற்றம் செய்யப்பட்டு அமராவதிபாளையத்தில் செயல்படுகிறது. மூன்றாவது வாரமாக இங்கு சந்தை நடந்தது.
400 மாடுகள், 300 எருமை, 200 கன்றுக்குட்டிகள் என 900 கால்நடைகள் விற்பனைக்கு வந்தன. கால்நடைகளை கட்டி வைக்க இடமில்லாமல் வேன், ஆட்டோக்களில் கட்டி வைத்திருந்தனர்.
உள்ளூர் வியாபாரிகளை காட்டிலும் கேரள வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். வழக்கமாக மாடுகள் விற்பனை அதிகமாக இருக்கும். ஆனால் கன்றுக்குட்டிகள் அதிகளவில் வந்திருந்தது.
தரமான முதல் ரக கன்றுகுட்டி ரூ. 7,000 வரை விற்றது. மாடுகள் ரூ.25 முதல் ரூ.35 ஆயிரம் வரையும், எருமை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும் விற்றன. ரூ. 90 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்ததாக சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X