என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்ளாட்சி தேர்தல்- கள்ளக்குறிச்சியில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் விருப்ப மனு
Byமாலை மலர்14 Sep 2021 10:55 AM GMT (Updated: 14 Sep 2021 10:55 AM GMT)
பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 65 பேரும், யூனியன் கவுன்சிலர் பதவிக்கு 40 பேரும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 18 பேரும் விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9-ந் தேதிகளில் நடைபெறுகிறது.
இதையொட்டி தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் தங்களது வேட்பாளர்கள் தேர்வில் தீவிரமடைந்துள்ளனர். முன்னதாக விருப்ப மனு வாங்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி ஒன்றியத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளிடம் கள்ளக்குறிச்சி மாவட்ட கட்சி அலுவலகத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. பொருப்பாளரும், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வசந்தம் கார்த்திகேயன் ஏற்கனவே விருப்ப மனுக்களை பெற்றுள்ளார்.
தியாகத்துருகம் வடக்கு, தெற்கு ஒன்றியங்களை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளிடம் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. விருப்ப மனுக்களை வாங்கியுள்ளார். இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை கழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் விருப்பமனு குறித்து அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் விருப்பமனு பெறப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து இன்று தலைமை கழகத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.
கள்ளக்குறிச்சியில் 9 வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அந்தந்த பகுதியில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் மனுக்கள் பெற்றுள்ளனர். மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், மாநில செயலாளர் முனிஸ்வர்கணேசன் ஆகியோர் முன்னிலையில் விருப்பமனு பெறப்பட்டுள்ளது.
பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 65 பேரும், யூனியன் கவுன்சிலர் பதவிக்கு 40 பேரும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 18 பேரும் விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளனர்.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9-ந் தேதிகளில் நடைபெறுகிறது.
இதையொட்டி தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் தங்களது வேட்பாளர்கள் தேர்வில் தீவிரமடைந்துள்ளனர். முன்னதாக விருப்ப மனு வாங்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி ஒன்றியத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளிடம் கள்ளக்குறிச்சி மாவட்ட கட்சி அலுவலகத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. பொருப்பாளரும், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வசந்தம் கார்த்திகேயன் ஏற்கனவே விருப்ப மனுக்களை பெற்றுள்ளார்.
தியாகத்துருகம் வடக்கு, தெற்கு ஒன்றியங்களை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளிடம் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. விருப்ப மனுக்களை வாங்கியுள்ளார். இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை கழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் விருப்பமனு குறித்து அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் விருப்பமனு பெறப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து இன்று தலைமை கழகத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.
கள்ளக்குறிச்சியில் 9 வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அந்தந்த பகுதியில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் மனுக்கள் பெற்றுள்ளனர். மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், மாநில செயலாளர் முனிஸ்வர்கணேசன் ஆகியோர் முன்னிலையில் விருப்பமனு பெறப்பட்டுள்ளது.
பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 65 பேரும், யூனியன் கவுன்சிலர் பதவிக்கு 40 பேரும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 18 பேரும் விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X