என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சின்ன வெங்காயம் மகசூல் பாதிப்பால் கொள்முதல் விலை வீழ்ச்சி
Byமாலை மலர்14 Sep 2021 6:55 AM GMT (Updated: 14 Sep 2021 6:55 AM GMT)
வெங்காயத்தின் தரத்திற்கேற்ப ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.30 வரை மட்டுமே விலை பேசி விவசாயிகளிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
திருப்பூர்;
பல்லடம், பொங்கலூர் வட்டார பகுதிகளில் ஆண்டு முழுவதும் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
70 நாட்கள் முதல் 110 நாட்களில் அறுவடை செய்யலாம் என்பதால் சின்ன வெங்காயம் சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவு ஆகிறது. நல்ல விளைச்சல் இருந்தால் ஏக்கருக்கு 6 டன் முதல் 8 டன் வரை மகசூல் கிடைக்கும்.
நடப்பு ஆண்டு நல்ல விளைச்சல் கிடைக்கவில்லை. குறைந்த அளவே ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெங்காயத்தின் தரத்திற்கேற்ப ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.30 வரை மட்டுமே விலை பேசி விவசாயிகளிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
இதுகுறித்து உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலச் செயலாளர் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன் கூறியதாவது:
நடப்பு ஆண்டு வைகாசி மாதத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது. சரியான தட்பவெப்ப நிலை இல்லாததால் விளைச்சல் குறைவானது. மகசூல் குறைந்தால் சந்தைக்கு வரத்து குறைந்து அதனால் விலை உயரும். ஆனால் நேர்மாறாக தரமில்லாத வெங்காய விளைச்சலால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
பெரும்பாலான விவசாயிகள் மாற்றுப்பயிர் சாகுபடி செய்யாமல் தொடர்ந்து சின்ன வெங்காயத்தையே சாகுபடி செய்துள்ளனர்.
விளைநிலத்தில் சின்ன வெங்காயத்தை தொடர்ந்து சாகுபடி செய்தால் மண்ணின் வளம் குறைந்து விடும். வேறு பயிர் சாகுபடி செய்து விட்டு அதன் பின்னர் சின்ன வெங்காயம் பயிரிடலாம். முன்னோர் காட்டிய வழியில் பயிர் சாகுபடியில் சுழற்சி முறையை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும்.
தற்போது 3 டன் முதல் 4 டன் வரை மட்டுமே மகசூல் கிடைக்கிறது. ஏற்றுமதி தரம் மிக்க சின்ன வெங்காய மகசூல் கிடைக்கவில்லை. இது போன்ற காரணத்தால் நடப்பு ஆண்டில் விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு செலவழித்த அசல் பணமாவது கிடைக்குமா? என்ற அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
நல்ல விலையை எதிர்பார்த்து விளைநிலத்தில் சின்ன வெங்காயத்தை பட்டறை அமைத்து பெரும்பாலான விவசாயிகள் இருப்பு வைத்து பாதுகாத்து வருகின்றனர். 3 மாதங்கள் வரை சின்ன வெங்காயத்தை இது போன்ற முறையில் இருப்பு வைக்க முடியும்.
மத்திய, மாநில அரசுகள் சின்ன வெங்காய சாகுபடி விவசாயிகளை காப்பாற்ற நிவாரணத் தொகை வழங்க வேண்டும். வெளிநாடுகளில் இருப்பதுபோல வேளாண்மைப் பயிரிடுதல் குறித்து அரசு கண்காணிப்பதுடன் ஆலோசனைகளை வழங்கிட வேண்டும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X