என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பி.ஏ.பி., தண்ணீரை குளம்,குட்டைகளில் நிரப்ப வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
Byமாலை மலர்13 Sep 2021 7:36 AM GMT (Updated: 13 Sep 2021 7:36 AM GMT)
குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயத்துடன் இணைந்த தொழிலாக கால்நடை வளர்ப்பு நடைபெற்று வருகிறது.
குடிமங்கலம்:
குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. குடிமங்கலம் ஒன்றியத்தில் 80-க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள், மற்றும் தடுப்பணைகள் உள்ளன.
குடிமங்கலம் பகுதிகளில் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் குளம், குட்டைகள் நிரம்பவில்லை.
நிலத்தடி நீர்மட்டமும் எதிர்பார்த்த அளவு உயரவில்லை. குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயத்துடன் இணைந்த தொழிலாக கால்நடை வளர்ப்பு நடைபெற்று வருகிறது. மானாவாரி சாகுபடியில் கொத்தமல்லி மக்காச்சோள சாகுபடி செய்யப்படுகிறது.
கிணற்றுப்பாசனம் மூலம் தக்காளி, கத்தரி, மிளகாய் சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பருவமழை கை கொடுக்காததால் காய்கறி சாகுபடி எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
பி.ஏ.பி.பாசனம் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. பாசனத்திற்காக பி.ஏ.பி. வாய்காலில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் குடிமங்கலம் பகுதியில் மானாவாரி சாகுபடியில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.
குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்கள் திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறது. திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீர் போதுமானதாக இல்லை.
ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் எதிர் பார்த்த அளவு தண்ணீர் இல்லை. ஊராட்சிகள் சில ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீரை மின் மோட்டார் அமைத்து குடியிருப்புகளுக்கு வழங்கி வருகிறது.
பி.ஏ.பி., வாய்க்காலில் நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில் திறந்து விடப்படும் பி.ஏ.பி. தண்ணீரை அருகிலுள்ள குளம்,குட்டைகளுக்கு நிரப்ப வேண்டும். இதனால் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஊராட்சிகளில் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X