என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிளாஸ்டிக் கழிவு சாலை திட்டம் விரிவுபடுத்தப்படுமா?
Byமாலை மலர்13 Sep 2021 4:53 AM GMT (Updated: 13 Sep 2021 4:53 AM GMT)
பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டு போடப்படும் சாலைக்கு பிரத்தியேக உபகரணங்கள் மற்றும் அதிக வெப்பம் தரக்கூடிய பாய்லர்கள் தேவை.
திருப்பூர்:
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டு சாலைகள் அமைக்கும் திட்டம் சில ஆண்டுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இத்திட்டம் குறைந்த அளவு பயன்பாட்டில் மட்டுமே உள்ளது.
இதுகுறித்து பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பொறியாளர் கற்பகம் கூறியதாவது:
பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டு போடப்படும் சாலைக்கு பிரத்தியேக உபகரணங்கள் மற்றும் அதிக வெப்பம் தரக்கூடிய பாய்லர்கள் தேவை. அவை இங்குள்ள ஒப்பந்ததாரர்களிடம் இல்லை. சாதாரண பாய்லர்களில் பிளாஸ்டிக் கழிவுகள் உருகுவதில்லை என்பதால் சாலை பணி மேற்கொள்வதில் சிரமம் உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம், உடுமலை, குடிமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் கழிவு பிளாஸ்டிக் சாலை போடப்பட்டுள்ளது. பல்லடம் அருகே கழிவு பிளாஸ்டிக் கொண்டு, கடந்த 2014ம் ஆண்டு போடப்பட்ட சாலை இன்னும் சேதமடையாமல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X