search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பல்லடம் அருகே படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

    அக்கம்பக்கத்தினர் தண்டபாணியை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    பல்லடம்:

    பல்லடம் அண்ணா நகர் முதல் தெருவை  சேர்ந்தவர் தண்டபாணி(வயது62). தச்சுத் தொழிலாளியான இவர் பல்லடம் அருகே உள்ள க.அய்யம்பாளையம் பகுதியில் ஒருவரது வீட்டில் தச்சு வேலைகள் செய்து வந்தார். அந்த வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு கதவு பொருத்துவதற்காக கதவைத் தூக்கிக்கொண்டு படிக்கட்டில் ஏறி சென்றபோது கால் தவறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அக்கம்பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் தண்டபாணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×