என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் மாணவர் தனுஷ் மரணத்திற்கு திமுக அரசே முழுப்பொறுப்பு -பாஜக தலைவர் ஆவேசம்
Byமாலை மலர்12 Sep 2021 8:08 AM GMT (Updated: 12 Sep 2021 8:08 AM GMT)
மாணவர்களை அச்சுறுத்தும் பொய்யுரைகளை திமுக நிறுத்தவேண்டும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:
சேலம் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தனுஷ் (20) தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வின் அச்சம் காரணமாக அவர் உயிரிழந்திருக்கிறார். மாணவர் தனுஷ் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதேசமயம், நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக திமுக அளித்த வாக்குறுதி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பியவண்ணம் உள்ளனர்.
மாணவன் தனுஷின் தற்கொலை செய்த சம்பவம் வேதனை அளிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“மாணவர்களை அச்சுறுத்தும் பொய்யுரைகளை திமுக நிறுத்தட்டும். அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மாணவர்களின் உயிரை பலிவாங்கும் திமுக அரசு, சேலம் மாணவர் தனுஷ் மரணத்திற்கு முழுப்பொறுப்பு’ என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X