என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இ.எஸ்.ஐ., மருத்துவமனை இல்லாமல் தவிக்கும் திருப்பூர் தொழிலாளர்கள்
Byமாலை மலர்12 Sep 2021 7:31 AM GMT (Updated: 12 Sep 2021 7:31 AM GMT)
திருப்பூரில் 8600 நிறுவனங்கள், 3 லட்சம் தொழிலாளர்களை இ.எஸ்.ஐ., காப்பீட்டில் பயனாளியாக இணைத்துள்ளன.
திருப்பூர்:
திருப்பூரில் 200 படுக்கை வசதிகளுடன் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் மோடி கடந்த 2019- ல் அடிக்கல் நாட்டினார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் மருத்துவமனை கட்டப்படவில்லை.
இந்தநிலையில் லகு உத்யோக் பாரதி திருப்பூர் மாவட்ட தலைவர் ரஞ்சித், தேசிய இ.எஸ்.ஐ., வாரிய உறுப்பினரும், லகு உத்யோக் பாரதி தேசிய செயலாளருமான சுனில் சுசிகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
திருப்பூரில் 8600 நிறுவனங்கள்,3 லட்சம் தொழிலாளர்களை இ.எஸ்.ஐ., காப்பீட்டில் பயனாளியாக இணைத்துள்ளன. ஆனால் இ.எஸ்.ஐ., மருத்துவமனை இல்லாததால், தொழிலாளர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் மருத்துவ தேவைகளுக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். தொற்றுக்கு சிகிச்சை பெறுவதில் தொழிலாளர்கள் பெரும் இன்னல்களை சந்தித்தனர்.
எனவே திருப்பூரில் உடனடியாக இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இ.எஸ்.ஐ., வாரிய கூட்டத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X