என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் தமிழக அரசு நிச்சயம் வெற்றி பெறும்- அமைச்சர் பேட்டி
Byமாலை மலர்12 Sep 2021 5:23 AM GMT (Updated: 12 Sep 2021 5:23 AM GMT)
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்பதில் ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி:
திருச்சி மாநகராட்சி 61-வது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் காவேரி நகர் பகுதியில் 2020 மற்றும் 21-வது நிதி ஆண்டில் தனது தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.16 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடையை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் பேசும்பொழுது இது என்னோட அரசு அல்ல, நமது அரசு என்று கூறினார். நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் போது அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அவரது கோரிக்கைக்கு பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்பதில் ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளன.
இன்று நடக்கும் நீட் தேர்வு தமிழகத்தில் கடைசி நீட் தேர்வாக இருக்குமா? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, நீட் தேர்வு எதிர்த்து போராடுகிறோம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை தமிழக முதல்வருக்கும் உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளை திறப்பது குறித்து வருகிற 15-ந்தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் முடிவெடுப்பார்.
9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி சிறந்த முறையில் அளிக்கப்பட்டு வருகிறது. 40 முதல் 45 நாட்களுக்கு மாணவ, மாணவிகளை பள்ளிக்கு வர வைப்பது, அதன் பிறகு தான் முறையான வகுப்புகள் நடைபெறும் என்றார்.
திருச்சி மாநகராட்சி 61-வது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் காவேரி நகர் பகுதியில் 2020 மற்றும் 21-வது நிதி ஆண்டில் தனது தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.16 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடையை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் பேசும்பொழுது இது என்னோட அரசு அல்ல, நமது அரசு என்று கூறினார். நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் போது அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அவரது கோரிக்கைக்கு பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்பதில் ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று நடக்கும் நீட் தேர்வு தமிழகத்தில் கடைசி நீட் தேர்வாக இருக்குமா? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, நீட் தேர்வு எதிர்த்து போராடுகிறோம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை தமிழக முதல்வருக்கும் உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளை திறப்பது குறித்து வருகிற 15-ந்தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் முடிவெடுப்பார்.
9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி சிறந்த முறையில் அளிக்கப்பட்டு வருகிறது. 40 முதல் 45 நாட்களுக்கு மாணவ, மாணவிகளை பள்ளிக்கு வர வைப்பது, அதன் பிறகு தான் முறையான வகுப்புகள் நடைபெறும் என்றார்.
பின்னர் காட்டூர் பிலோமினாள் பள்ளியில் நடந்த கொரொனா தடுப்பூசி முகாமை அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
இதையும் படியுங்கள்... ‘நீட்’ தேர்வு இன்று நடக்கிறது- தமிழ்நாட்டில் 1 லட்சத்து 11 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X