என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழக்கரை அருகே திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் மர்ம மரணம்
Byமாலை மலர்12 Sep 2021 4:54 AM GMT (Updated: 12 Sep 2021 4:54 AM GMT)
கீழக்கரை அருகே திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழக்கரை:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சேதுபதி நகரைச் சேர்ந்தவர் ராமர். இவரது இரண்டாவது மகள் மோனிகா (வயது 18). கடந்த 4 ஆண்டுகளாக இவர் ஏர்வாடியில் தங்கி இருந்தார்.
அப்போது ஏர்வாடி அருகே உள்ள பழஞ்சிறையை சேர்ந்த தர்மராஜ் என்பவரை காதலித்தார். இது குறித்து ராமர் வீட்டிற்கு தெரிந்ததும் மோனிகாவை கண்டித்தனர். ஆனால் தர்மராஜைத்தான் திருமணம் செய்வேன் என மோனிகா பிடிவாதமாக இருந்தார்.
மேலும் மோனிகாவை தர்மராஜ் பழஞ்சிறைக்கு அழைத்து சென்று மே 28-ந்தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், மோனிகா நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இது குறித்து தகவலறிந்த மோனிகாவின் உறவினர்கள் பழஞ்சிறைக்கு சென்றனர். அங்கு மோனிகாவின் உடலில் காயம் உள்ளதால் அவரது இறப்பில் மர்மம் இருப்பதாகவும் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறும் மோனிகாவின் தாயார் பூமாதேவி கீழக்கரை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து டி.எஸ்.பி. சுபாசும் விசாரித்து வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சேதுபதி நகரைச் சேர்ந்தவர் ராமர். இவரது இரண்டாவது மகள் மோனிகா (வயது 18). கடந்த 4 ஆண்டுகளாக இவர் ஏர்வாடியில் தங்கி இருந்தார்.
அப்போது ஏர்வாடி அருகே உள்ள பழஞ்சிறையை சேர்ந்த தர்மராஜ் என்பவரை காதலித்தார். இது குறித்து ராமர் வீட்டிற்கு தெரிந்ததும் மோனிகாவை கண்டித்தனர். ஆனால் தர்மராஜைத்தான் திருமணம் செய்வேன் என மோனிகா பிடிவாதமாக இருந்தார்.
மேலும் மோனிகாவை தர்மராஜ் பழஞ்சிறைக்கு அழைத்து சென்று மே 28-ந்தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், மோனிகா நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இது குறித்து தகவலறிந்த மோனிகாவின் உறவினர்கள் பழஞ்சிறைக்கு சென்றனர். அங்கு மோனிகாவின் உடலில் காயம் உள்ளதால் அவரது இறப்பில் மர்மம் இருப்பதாகவும் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறும் மோனிகாவின் தாயார் பூமாதேவி கீழக்கரை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து டி.எஸ்.பி. சுபாசும் விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X