என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆரல்வாய்மொழி அருகே விபத்தில் சிக்கிய மேலும் ஒரு பெண் பலி
ஆரல்வாய்மொழி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் படசேரி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரிகா (வயது 45).
இவரது சகோதரர் மகன் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சந்திரிகா தனது உறவினர்கள் ஜெயலெட்சுமி, கமலம், தமிழரசி ஆகியோருடன் ஆரல்வாய் மொழிக்கு வந்திருந்தார்.
சம்பவத்தன்று ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் ஒன்று இவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதில் ஜெயலெட்சுமி பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். கமலம் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு கமலம்பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்